search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்"

    • இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி, 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி, 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன்பின்பு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஆனால் கோவிலில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

    கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ.17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த விளக்குகள் பொருத்திய போது ஜெனரேட்டரும் அமைக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்படவில்லை. இதனால் திடீரென மின்சாரம் தடைபடும்போது, யு.பி.எஸ். மூலம் சில விளக்குகள் மட்டுமே எரிகிறது. கோவிலில் பெரும்பாலான பகுதி இருட்டாக மாறி விடுகிறது. எனவே விரைவில் ஜெனரேட்டரை நிறுவ ஏற்பாடு செய்யவேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் ரூ. 75 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை தீட்டினர். ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன. இந்த ஓவியங்கள் முழுமை பெற செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

    திருவட்டார்-குளச்சல் சாலையில் தபால் நிலைய சந்திப்பில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கோவிலில் பல்வேறு ேமம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகளை பார்ப்போம்.

    நாதஸ்வர கலைஞர்

    கேசவபுரத்தை சேர்ந்த நேசமணி:-

    கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றி நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து வந்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள். தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    25-க்கும்மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த கோவிலில் இன்று வெறும் 5 பூசாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூசாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் குலசேகரப் பெருமாள் கோவிலுக்கு தனி பூசாரி நியமிக்க வேண்டும்.

    கூடுதல் பக்தர்களுக்கு அன்னதானம்

    ஆற்றூரை சேர்ந்த லலிதா:-

    தினமும் அறநிலையத்துறை சார்பில் 150 பக்தர்களுக்கு மட்டுமே கோவிலில் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதுவும் டோக்கன் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து விட்டு அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றமுடன் திரும்பிச்செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த நாட்களில் கூடுதலாக 200 பக்தர்களுக்காவது அன்னதானம் வழங்க முன் வரவேண்டும்.

    கடிதம் எழுதப்பட்டுள்ளது

    பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கோவில் மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-

    கோவிலில் போதிய அர்ச்சகர்களை நியமிக்கவும், இசைக் கலைஞர்கள் நியமிக்கவும் மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஜெனரேட்டர் விரைவில் பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாட்டு பணிகள் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

    • ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும்
    • பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு பின்னர் நடக்கும் முதல் களப பூஜை நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.

    இதையொட்டி காலை நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடக்கிறது. 10 மணிக்கு மீண்டும் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்துவார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. 12 மணிக்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகளுக்கு களப அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். இதேபோல் நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறுகிறது.

    களப பூஜையின் இறுதி நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு 47 கலசங்கள் வைத்து பூஜை நடக்கிறது. பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறுகிறது.களப பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆதிகேசவப் பெருமாள் பாம்பணை மீது சயன கோலத்தில் 3 வாயில்கள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

    ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மஹா கும்பாபிஷே கத்துக்குப் பின்னர் நடை பெறும் முதல் வைகுண்ட ஏகாதசி ஆகும். தற்போது கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

    இன்று வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் வரிசையில் செல்வ தற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணியளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்க ளில் மலர்களால் அலங்க ரிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அர்ச்சனா மூர்த்தி விக்கி ரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 6.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருவறையில் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் காலை 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும் நடைபெற்றது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். இன்று மதியம் 12 மணி முதல் கோவிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடை பெறுகிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்கு களுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிப்பதைக்காணலாம். கருட வாகனத்தில் ஆதி கேசவப்பெரு மாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகத்தினரும், பக்தர்க ளும் இணைந்து செய்து உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது
    • அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு திவ்விய தரிசனம் நடைபெறும்.

    கன்னியாகுமரி:

    தென்தமிழகத்தில் 108 வைணவ திருத்தலங்களில் கன்னியாகுமரி மாவட்டத் தின் மிகவும் சிறப்பு மிக்க கோவில்களின் ஒன்றாக காணப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகும். பிரசித்தி பெற்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டு நம் முன் னோர்களால் பாரம்பரிய வகையில் செயல்படுத்தி வரும் ஆதிகேசவ பெரு மாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது.

    இது 16,008 சாளக்கி ராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கரு வறையில் மூன்று நிலை வாயில்கள் உள்ளன. திரு முகம், திருக்கரம், திருப்பா தம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழைவு வாயி லிலும் காணலாம்.

    திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கை யையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காண லாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படை யினையும் காணலாம். தரை யில் தாயாருடன் கூடிய பெரு மாளின் உலோகத் திருமேனி யும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்க ளையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளை யும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பா தம் இவற்றை இதே வரிசைக்கிர மத்தில் தரிசிப்பது இக்கோவி லின் மரபு ஆகும்.

    இக்கோவிலின் பிர தான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா வரும் ஜனவரி 2-ந்தேதி நடக்க உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு திவ்விய தரிசனம் நடைபெறும். அதை தொடர்ந்து அகண்ட நாம ஜெபம், சிறப்பு அபிஷேகம், மலர்முழுக்கு தொடக்கம் நடைபெறும். மதியம் அன்னதானமும், மாலையில் தீபாராதனையும் ஆன்மீக சொற்பொழிவு, இரவு பரமபத வாசல் திறப்பு சுவாசி கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் செய்து வருகிறார். 

    • கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெரு மாள் கோவில் ஒன்றாகும்.

    கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் கேராளவில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று விடுமுறை நாளையொட்டி பக்தர்கள் காலையில் இருந்தே வருகை தந்தார்கள். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்கள் ஒற்றை கால்மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அன்னதானத்தை சுமார் 300 நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
    • இந்த கோவிலில் கடந்த ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி நடந்தது. கோவிலின் சிறப்பை கேள்விப்பட்ட பலரும் நாள் தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை மற்றும் மாலையில் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். சபரிமலைக்கு சென்று விட்டு குமரி மாவட்டம் வருகை தந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும், ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி மூன்று வாசல்கள் வழியாக சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தற்போது மதியம் 100 பேருக்கு மட்டுமே கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
    • வழக்கமாக திருவிளக்கு பூஜையின் போது லட்சதீபவிழாவும் சேர்த்து நடத்தப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆறு ஆண்டுகளுக்குப்பின்னர் நேற்று ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தபெற்ற பெருமாள் கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மிகவும் முக்கியமானது. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கு முன்புவரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடந்து வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் திருப்பணி நடந்து வந்ததால் ஆறு ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடக்கவில்லை.

    கடந்த ஜூலை மாதம் இந்தகோவிலில் 108 ஆண்டுகளுக்கு பிறகு மஹாகும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது அதன்பிறகு தினமும் காலை மாலைவேளைகளில் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவந்தனர். இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது.

    அதன்படி நேற்று மாலை கோவில் பஜனையைத் தொடந்து வெள்ளிமலை சுவாமி சைதன்யா மகராஜ் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் அலங்கார தீபாராதனைக்குப் பின்னர் திருவிளக்கு பூஜை துவங்கியது.

    திருவிளக்கு பூஜையின் போது மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக திருவிளக்கு பூஜையின் போது லட்சதீபவிழாவும் சேர்த்து நடத்தப்படுவது வழக்கம். நேற்று மலையில் அந்த பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மழைகாரணமாக குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளே விளக்கணி மாடத்தில் ஏற்றப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்ததால் 6 ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை.

    கடந்த ஜூலை மாதம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது. அதன்படி நேற்று மாலையில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது. வெள்ளிமலை சாமி சைதன்யா மகராஜ் தலைமை தாங்கி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்கு பின்னர் திருவிளக்கு பூஜை தொடங்கியது.

    இந்த பூஜையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    • ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.
    • திருவம்பாடி கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது.

    விழாவின் 10-வது நாளான நேற்று ராமாயண பாராயணம், சிறப்பு நாதஸ்வர கச்சேரி போன்றவை நடந்தது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும் திருவம்பாடி கிருஷ்ணசுவாமியும் கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    அப்போது திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் சென்றார். திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து இருந்தனர்.

    • இன்று இரவு 7 மணிக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
    • இன்று நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கில் பவனி வருதல், துரியோதனன் வதம், கதகளி ஆகியவை நடந்தது.

    நேற்று பக்தி இன்னிசை, சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், பாலிவதம் கதகளி ஆகியவை நடைபெற்றது.

    நேற்று (திங்கட்கிழமை) நாதஸ்வர கச்சேரி, சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

    • ஐப்பசி திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 1-ந்தேதி 10 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந் தேதி சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    24-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளியும், 25-ந் தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளியும் நடைபெறும்.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9.30 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி பவனி வருதல், நள சரிதம் கதகளியும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதலும், 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது.

    30-ந் தேதி இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.

    ×